1
கால்கோள் விழா (ஊசி கால்) & கிராம சாந்தி
பங்குனி உத்திர திருநாளில் கால்கோள் விழா நடைபெறும். 6-ம் நாள் கிராம சாந்தி நடைபெறும்.
2
கொடியேற்றம் (7-ம் நாள் காலை)
7-ம் நாள் காலை அத்தனூர் செங்குந்தர் முதலியார் சமூகத்தினரால் கொடியேற்றம் நடைபெறும்.
6 நாட்கள் மண்டப கட்டளைகள் & அம்மன் வாகன ஊர்வலம் (இரவு 9 மணிக்கு மேல்)
முதல் நாள்
அத்தனூர் செங்குந்தர் முதலியார்கள்
குதிரை வாகனம்
இரண்டாம் நாள்
இராசிபுரம் நாட்டு கவுண்டர் விழியன் குல சமுதாயத்தினர்
சிம்ம வாகனம்
மூன்றாம் நாள்
திருச்செங்கோடு பயிரன் குல கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்
காமதேனு வாகனம்
நான்காம் நாள்
அத்தனூர் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள்
பூத வாகனம்
ஐந்தாம் நாள்
கல்லாங்குளம் ஸ்ரீ சுவாமியார் (குருக்கள்)
பல்லக்கு வாகனம்
ஆறாம் நாள்
மல்லூர் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள்
அன்ன வாகனம்
முதல் ஆறு மண்டப கட்டளைகள் முறையே கொடியேற்றிய நாளிலிருந்து 7-ம் நாள் முதல் 12-ம் நாள் வரை நடைபெறும்.
13-ம் நாள்: திருக்கல்யாணம் & திருத்தேர் வடம் பிடித்தல்
13-ம் நாள் ரேவதி நட்சத்திரத்தில் காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற பின்பு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள்வார்.
மாலை 4 மணிக்கு திருத்தேர் மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.
பாரம்பரிய சடங்குகள் & நிலை சேருதல்:
வடக்கு தலைவாசலில் தேர் சேரும்போது உரும்பிகாரன் சன்னதியில் ஆட்டு குட்டி பலியிட்டு பூசாரிகள் தீர்த்தம் தெளிப்பார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் வழிபாட்டுச் சடங்கு செய்து 3 கற்களைக் குழியில் இடுவார்கள்.
அதன்பின் தேர் பழைய இடத்திற்கு நிலை சேர்ந்து உற்சவ மூர்த்திக்கு மகா பூஜை நடைபெறும்.
14
14-ம் நாள்: புஷ்ப பல்லக்கு & வான வேடிக்கை
14-ம் நாள் இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் (சத்தாபரணம்) வலம் வந்து வான வேடிக்கை நடைபெறும்.
15
15-ம் நாள்: வசந்த உற்சவம் & மஞ்சள் நீராட்டம்
15-ம் நாள் அம்மன் வசந்த உற்சவம் அவரோகணம் செய்து மஞ்சள் நீராட்டம் விமரிசையாக நடைபெறும்.
1. அத்தனூர் (Athanur)
2. அத்தனூர் புதூர் (Athanur Pudur)
3. ஆயிபாளையம் (Ayipalayam)
4. ஆலாங்காட்டு புதூர் (Alangattu Pudur)
5. தட்டாங்குட்டை புதூர் (Thattanguttai Pudur)
6. உடுப்பத்தான் புதூர் (Udupathan Pudur)
7. மூணுமூலக்காடு (Moonumoolakkadu)
8. விநாயகபுரம் (Vinayagapuram)